தமிழ்நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்கும் 2025 ஆம் ஆண்டு வரை முழுமையான 100 % வரி விலக்கை வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசாணையின்படி, 2025ம் ஆண்டு டிச., 31 வரை வரி கிடையாது.
இந்தநிலையில் 01.01.2023 முதல் 31.12.2025 வரை பேட்டரியால் இயக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீத வரி விலக்கு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு நிதித் துறையின் ஒப்புதல் தேவையில்லை எனவும், தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் வரிவிதிப்புச் சட்டம், 1974 பிரிவு 20 மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி அனைத்து பேட்டரி வாகனங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து மின்சார வாகனங்கள் அறிமுகம் மற்றும் புதிய நுட்பங்களை பயன்படுத்தி அதிகப்படியான ரேஞ்சு வழங்கும் வாகனங்களை அனைத்து மோட்டார் வாகன தயாரிப்பாளர்களும் அறிமுகம் செய்து வருகின்றனர்.